தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 மார்ச், 2017

இளையராஜா அனுப்பிய அறிக்கை(நோட்டீஸ்) - எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதிர்ச்சி( 'ஷாக்')!

இந்த நியாயம் எப்படி சரியாகும்!படத்தின் இசைக்கு,பாட்டின் இசைக்கு என தயாரிப்பாளரிடம் இருந்து அனைத்துப் பணத்தையும் பெற்றுவிட்ட இசையமைப்பாளருக்கு எப்படி பாடலின் காப்புரிமை!!

அதுவும் பாடலை பாடி உயிரூட்டிய பாடகர்களே பாடக்கூடாது என சொல்லும் அளவுக்கு எப்படி ??

அப்படியாயின் படத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர்,நடிகர்கள்,கவிஞர் என எல்லோருக்கும் அந்த உரிமை உண்டல்லவா?

அப்படிஎன்றால் இளையராஜா கச்சேரி வைப்பதென்றால் இவர்கள் அனைவரிடமும் அனுமதி பெறவேண்டுமல்லவா?பெறுகின்றாரா?

அத்துடன் அவர் பாடல்களின் இசைகள் பல வேறு பாடல்களின் இசையில் இருந்து திருடப்பட்டவை,பிரதி செய்யப்பட்டவை!அவற்றை அவர்கள் அனுமதித்தார்களா?

அவர்கள் தடை விதிக்க உரிமை இப்போதும் உண்டா?

விற்ற பொருள் எப்படி கடைக்கு சொந்தமாகும்,அப்படியான காப்புரிமை மனித உரிமைமீறல் இல்லையா?இந்தியா ஜனநாயக நாடா,சர்வாதிகார நாடா?இப்படியான காப்புரிமை பணம் கொடுப்பவருக்கு இல்லாமல் தொழில் செய்தவருக்கு கொடுத்தது யார்?

வாக்காளரே இது அடக்குமுறை என்பதே உங்களுக்கு தெரியவில்லையா?ஆரம்பத்தில் இதை கவனிக்காவிட்டால் விற்ற காய்கறிகளை சமைக்க முன் தோட்டக்காரன்வீட்டில் வந்து பிடுங்கிக்கொள்வான்!

எச்சரிப்பது என் கடமை!செய்துவிட்டேன்!

நாளை நல்ல பொழுதாகட்டும்!

http://hi2cinema.com/celebs/06/137968?ref=right_featured

கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.
என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். 'எஸ்.பி.பி.50' என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்."
இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக