தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 12, 2017

உங்கள் ராசிக்கு இந்த கடவுளை வணங்குங்கள்: செல்வம், அதிர்ஷ்டம் கொட்டுமாம்

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் உரிய ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்த கிரகத்தின் அதிகபதியாக விளங்கும் கடவுளை வணங்கினால், அவர்களின் வாழ்வில் செல்வமும், அதிரஷ்டமும் அதிகமாகும் என்று ஜோதிடம் கூறுகிறது.
மேஷம்
செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும். ஏனெனில் மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய்.
ரிஷபம்
ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
மிதுனம்
புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். எனவே வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.
கடகம்
கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். எனவே சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். எனவே சூரியனின் வலிமையை அதிகரிக்க சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.
கன்னி
கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். எனவே புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.
துலாம்
துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.
விருச்சிகம்
செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.
தனுசு
தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியை ஆளும் கிரகம் சனி. எனவே இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி தான். எனவே செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.
மீனம்
மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
http://news.lankasri.com/astrology/03/125069?ref=right_featured

No comments:

Post a Comment