தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, July 27, 2017

இந்த அறிகுறிகள் உணர்த்தும் நோய் என்ன? அலட்சியம் வேண்டாம்

நோய் ஏற்படுவதற்கு முன் நம் உடலில் சில அறிகுறிகள் தென்படுவது இயல்பு.
அந்த வகையில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து நமது உடலில் ஏற்பட போகும் நோய் என்னவென்று தெரிந்துக் கொள்ள முடியும்.
அறிகுறிகள் உணர்த்தும் நோய்கள்?
  • கைவிரல் நகங்களின் மீது மெல்லிய கருப்புக்கோடு விழுந்தால், அது இருதயத்தில் ஏற்பட போகும் பிரச்சனையின் அறிகுறி என்று அர்த்தம்.
  • தோள்பட்டை, முதுகு, குதிக்கால் போன்ற உறுப்புகளில் இறுக்கம், வலி ஏற்பட்டால், அது உங்கள் உடலில் காற்றின் அழுத்தம் அதிகரித்து, வாயு தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
  • முகத்தில் அரிப்பு அல்லது நமைச்சல் இருந்தால், அது கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம்.
  • வயிற்றுவலி, பேதி போன்ற பிரச்சனை இருந்தால், அது கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என்று அர்த்தம்.
  • கண்கள் மற்றும் மூக்கில் தொடர்ந்து அரிப்பு பிரச்சனை இருந்தால், அது ஜலதோஷம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
  • காதில் அதிக குடைச்சல் அல்லது வலி இருந்தால், அது காய்ச்சல் ஏற்பட போவதற்கான அர்த்தமாகும்.
  • உதடு அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அது உடலில் நீர்ச்சத்து மற்றும் எண்ணெய்ப்பசை குறைந்து விட்டது என்பதை குறிக்கிறது.
  • முதுகுத்தண்டு அல்லது இடுப்புப்பகுதியில் தொடர்ந்து வலி ஏற்பட்டால், அது எலும்புகளின் தேய்மானம் தொடங்குகிறது என்று அர்த்தம்.
  • கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், அது உடலில் அழுத்தம் மற்றும் உஷ்ணம் அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.
  • அதிக பசி மற்றும் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்தால், அது நீரழிவு நோய் ஏற்படுவதற்கான தொடக்கம் என்று அர்த்தம்.
http://news.lankasri.com/disease/03/129421

No comments:

Post a Comment