தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, November 7, 2017

திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மாளிகை!


திருகோணமலையில் நிலத்தடி மாளிகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை de redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் போது இந்த நிலத்தடி அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தடி அறையின் விசேட பகுதி ஒன்றுக்கு கொங்கிறீட் கலவை பயன்படுத்தப்பட்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்ணின் ஊடாக அதற்குள் நுழைவதற்கான கதவு ஒன்று வைத்து மூடப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கதவு கருங்கற்களினால் கட்டி மூடப்பட்டுள்ள நிலையில், தோன்றியுள்ள நிலத்தடி அறை மற்றும் ஆங்கில காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பீரங்கித் தாங்கி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களினால் கொங்கிறீட் கல், மணல் ஆகியவைகள் பயன்படுத்தி ஆரம்ப மாற்றங்கள் மேற்கொண்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அந்த பகுதிகளில் மணல் மற்றும் பெற்றோலினால் நிரப்பப்பட்டு மூடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரளவு நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், நிர்மாணிப்புகள் சீமெந்து பயன்பாட்டில் நிறைவு செய்யப்பட்டிருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


http://www.tamilwin.com/special/01/164300

No comments:

Post a Comment