தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அதிசய சிவலிங்கம்!! கரைதிரும்பும் போது நடக்கும் அமானுஷ்யம்..?


குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரையில் நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து கடலினுள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் ஆச்சரியம் கொண்டது.
குறித்த சிவாலயம் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக ஐந்து சிவலிங்கங்களுடன் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடையாமல் உள்ளது.


தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடிமரத்தின் உச்சியைத் தொடும். பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து, இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.
நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு அந்தி முதல் மீண்டும் கரை நோக்கித் திரும்புகின்றனர்.
அது மட்டும் இல்லை இதில் இன்றும் நம்ப முடியாத பல அமானுஷ்யங்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்.....


http://www.manithan.com/religion/04/162904

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக