தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, February 5, 2018

இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்! நோய்களை குணமாக்கலாம்


ஒரு டம்ளர் நீரில் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள், ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
மருத்துவ நன்மைகள்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1/2 டீஸ்பூன் கருப்பு மிளகுத்தூள் மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து இதமான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும்.
  • சம அளவு மிளகுத்தூள், இலவங்க பட்டை தூள் மற்றும் பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து, அந்த பவுடரை நுகர்ந்து வந்தாலே மூக்கடைப்பு சரியாகிவிடும்.
  • பித்தக்கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆலிவ் எண்ணெய், ஒருபங்கு எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள் கலந்து உட்கொள்ள வேண்டும்.
  • உணவு சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து மென்மையாக கொப்பளித்தால், அது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், நச்சுக்களை அழித்து வாய்புண் வராமல் தடுக்கிறது.
  • 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் நீரில் கலந்து பருகி வந்தால், அது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைத்து, உடல் எடை அத்கிகரிக்காமல் தடுக்கிறது.
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் மிளகுத்தூள் கலந்து மெதுவாக சிப் செய்து பருகினால் குமட்டல் பிரச்சனையை தடுக்கலாம்.
  • 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் க்ளோவ் ஆயில் சேர்த்து ஒருநாளுக்கு இரண்டு முறை பற்களில் தேய்த்து வந்தால் பல் வலி குறையும்.
  • இதமான நீரில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் சளிக்கு நல்ல தீர்வைக் காணலாம்.
  • மூக்கில் இரத்தம் வழியும் போது பஞ்சை எலுமிச்சை சாற்றில் சற்று நனைத்து அதை மூக்கில் வைத்து, தலையை மேல்நோக்கி வைத்துக் கொண்டால் உடனடியாக மூக்கில் வழியும் ரத்தத்தை நிற்க வைக்கலாம்.

No comments:

Post a Comment