தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, April 13, 2018

மூன்று தடவை குடித்தால் போதும்! இருமலை சரிசெய்யலாம்


அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கஷாயமே நல்ல பலனை கொடுக்கும், ஓயாத இருமலால் அவதிப்படும் நபர்கள் கீழ்க்கண்ட கஷாயத்தை மூன்று வேளை அருந்தி வந்தால் குணமாகும்.
தேவையான பொருட்கள்
  • துளசி- ஒரு கைப்பிடி
  • வெற்றிலை – 2
  • புதினா - 1 கைப்பிடி
  • கற்பூரவல்லி – 3

செய்முறை
  • சுக்கு, மிளகு, திப்பிலி , வால் மிளகு, அதிமதுரம், சித்தரத்தை போன்றவற்றை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். சம அளவில் தனித்தனியாக வாங்கியும் ஒன்றாக கலந்து கொள்ளலாம்.
  • முதலில் எல்லா மருந்து இலைகளையும் நன்றாக கழுவி பொடியாக ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.
  • அவற்றுடன் மேலே சொன்ன மூலிகை பொடியையும் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இதனை 3 வேளைக்கு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும், இதனை மாத்திரை வடிவிலும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment